செய்திகள்
தாடிக்கொம்பு அருகே மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தாடிக்கொம்பு அருகே மில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
தாடிக்கொம்பு எம்.கே.நகரை சேர்ந்தவர் வசந்த் (வயது 37). இவர் தாடிக்கொம்பு அருகே உள்ள ஒரு தனியார் பஞ்சாலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், அதை தாயார் முத்துலட்சுமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை வீட்டின் சமையலறையில் வசந்த் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்தின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.