செய்திகள்
வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி தஞ்சையில் விவசாயிகள் சாலை மறியல்
தஞ்சாவூர் அருகே வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை ஆத்துபாலத்தில் அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் தொடர்ந்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.