செய்திகள்
கல்லக்குடி அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
கல்லக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
கல்லக்குடி:
கல்லக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் வினோத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ஆனைமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் வங்கி கடன்களையும், மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.