செய்திகள்
தர்மபுரியில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்திய 200 பேர் மீது வழக்கு
வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும் தர்மபுரியில் விவசாயிகள், தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தினார்கள்.
தர்மபுரி:
வேளாண் சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும் தர்மபுரியில் நேற்று முன்தினம் விவசாயிகள், தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தினார்கள்.
இந்த ஊர்வலத்தின் முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் உரிய அனுமதியின்றி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 40 பெண்கள் உள்பட 200 பேர் மீது தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.