செய்திகள்
பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா சென்னை திரும்புவார்- உறவினர் ஜெய்ஆனந்த் தகவல்
சசிகலா பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார் என்று அவரது உறவினர் ஜெய் ஆனந்த் கூறினார்.
சென்னை:
அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு ஒரு வாரமே ஆகியுள்ளதால் அவர் இன்னும் சில நாட்கள் பெங்களூரிலேயே தங்கி சிகிச்சை பெறுகிறார்.
இந்தநிலையில் சசிகலா பிப்ரவரி மாதம் சென்னை திரும்ப இருக்கிறார். இது தொடர்பாக சசிகலாவின் உறவினர் ஜெய் ஆனந்த் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு இருப்பதால் சசிகலா பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெறுவார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று காலக்கெடு வருகிற 31-ந்தேதி நிறைவு பெறும்.
எனவே சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனாலும் தொடர்ந்து பெங்களூரிலேயே தங்கி இருப்பார். அவர் பிப்ரவரி மாதம் முதல்வாரம் சென்னை திரும்புகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.