செய்திகள்
விபத்து பலி

திருமங்கலம் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2021-01-23 10:17 GMT   |   Update On 2021-01-23 10:17 GMT
திருமங்கலம் அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள மேல கோட்டையைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (வயது60). கூலித் தொழிலாளியான இவர் கரடிக்கல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். கரடிக்கல் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. படுகாயம் அடைந்த பாண்டியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News