செய்திகள்
சேலத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை வைத்தி உடையார்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 29), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் சரவணன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலாளி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சரவணன் தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாத மனவேதனையில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை வைத்தி உடையார்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 29), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஊர்மிளா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் சரவணன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலாளி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சரவணன் தனக்கு தெரிந்த நபர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த கடனை அவரால் திருப்பி கொடுக்க முடியாத மனவேதனையில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணம் ஏதும் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.