செய்திகள்
காவிரி ஆற்றில் மூழ்கி அரசு டாக்டர் பலி
திருமணமான 3 மாதத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஸ்ரீரங்கம்:
திருமணமான 3 மாதத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி காட்டூர் கைலாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் கிஷோர் பிரியதர்ஷன் (வயது 34). இவர் புள்ளம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். டாக்டர் கிஷோர் பிரியதர்ஷனுக்கு திருமணமாகி 3 மாதங்கள்தான் ஆகிறது. இவர் தனது மாமியாரின் அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் நேற்று காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தார். திதி கொடுத்ததும், உறவினர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென டாக்டர் கிஷேர் பிரியதர்ஷன் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கி பலியான டாக்டரின் உடலை மீட்டனர்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் டாக்டரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமான 3 மாதத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி அரசு டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி காட்டூர் கைலாஷ்நகர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் கிஷோர் பிரியதர்ஷன் (வயது 34). இவர் புள்ளம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். டாக்டர் கிஷோர் பிரியதர்ஷனுக்கு திருமணமாகி 3 மாதங்கள்தான் ஆகிறது. இவர் தனது மாமியாரின் அம்மாவுக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்களுடன் நேற்று காலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்தார். திதி கொடுத்ததும், உறவினர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென டாக்டர் கிஷேர் பிரியதர்ஷன் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கி பலியான டாக்டரின் உடலை மீட்டனர்.
மேலும் இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் டாக்டரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.