செய்திகள்
கொண்டலாம்பட்டி அருகே குட்கா விற்ற 2 பேர் கைது
கொண்டலாம்பட்டி அருகே குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் பிள்ளையார் நகர் கரட்டூர் பிரிவில் உள்ள ஒரு கடையில் குட்கா விற்பதை கண்டுபிடித்து கடை உரிமையாளரான பாலகிருஷ்ணன் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் பெரியபுத்தூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவர் அவரது கடையில் குட்கா விற்று வந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரையும் கைது செய்தனர்