செய்திகள்
கோப்புபடம்

ராமநாதபுரம் அருகே கடையை உடைத்து திருட்டு

Published On 2021-01-17 11:15 GMT   |   Update On 2021-01-17 11:15 GMT
ராமநாதபுரம் அருகே கடையை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் வாலாந்தரவையை சேர்ந்தவர் கலைமணி (வயது 62). இவர் வழுதூர் விலக்கு ரோட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு கலைமணி வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர் கடையை உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூ.10ஆயிரத்தை திருடி சென்று விட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News