செய்திகள்
கொலை

நாயை அடித்ததால் தகராறு- வாலிபர் குத்திக்கொலை

Published On 2021-01-17 01:54 GMT   |   Update On 2021-01-17 01:54 GMT
நாயை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 27). பொங்கல் பண்டிகையன்று இரவு இவர், குள்ளப்புரம் கிராமத்தை சேர்ந்த செல்வமணி (29), பிரபு பாண்டி (27) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஒரு நாயை நவீன்குமார் அடித்துள்ளார். இதைக்கண்ட செல்வமணியின் உறவினர் அம்மாசி என்பவர் வாயில்லாத ஜீவனை எதற்காக அடிக்கிறாய் என்று கேட்டார். அப்போது அவரையும், நவீன்குமார் தாக்கி தகாத வார்த்தைகளால் பேசினார்.

இதுகுறித்து அம்மாசி, செல்வமணியிடம் நேற்றுமுன்தினம் கூறினார். உடனடியாக செல்வமணி, நவீன்குமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார். அப்போது, அவரையும், அவரது குடும்பத்தினரையும் நவீன்குமார் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வமணி, தனது உறவினர்கள், நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு டி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு சென்று, நவீன்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனை தடுக்க முயன்ற அவரது நண்பர்கள் ராஜா, ஜெகதீஸ் ஆகியோரையும் கத்தியால் குத்திவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர்.

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ராஜா, ஜெகதீஸ் ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செல்வமணி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான தங்கப்பாண்டி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News