செய்திகள்
கரூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
கரூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் :
கரூர் ஆத்தூர்பிரிவு பகுதியில் சம்பவதன்று கஞ்சா விற்பதாக கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்ற போது, கஞ்சா விற்ற தேனி மாவட்டம், ஜெயமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.