செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நாளை வரை சுற்றுலா பயணிகள் வர தடை

Published On 2021-01-16 09:10 GMT   |   Update On 2021-01-16 09:10 GMT
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை கண்காணிக்க மாவட்டத்தில் 9 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருகே மடம் பகுதியில் ஒரு சோதனைச்சாவடியும், அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வரும் பகுதியில் ஒரு சோதனைச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News