செய்திகள்
மரணம்

பொள்ளாச்சி அருகே சுவர் இடிந்து தொழிலாளி பலி

Published On 2021-01-15 13:45 GMT   |   Update On 2021-01-15 13:45 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:

கோவை கிணத்துக்கடவு தேவனாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). கூலித்தொழிலாளி. இவர் நேற்று வடக்கிபாளையம் பகுதிக்கு வேலைக்கு சென்றார்.

பின்னர் வேலைகளை முடித்துவிட்டு மதியம் உணவு உண்பதற்காக அங்கு உள்ள மதில் சுவர் அருகே அமர்ந்து உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது மழையினால் சேதமடைந்த இருந்த அந்த மதில் சுவர் திடீரென இடிந்து மணிகண்டன் மீது விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து மணிகண்டன் மீது விழுந்திருந்த இடிபாடுகளை அகற்றி அவரை மீட்டனர்.

ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் வடக்கிபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பெரிய நாயக்கன்பாளையம் வெள்ளமடை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் அஜய் (20). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணம் அடையவில்லை. இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News