செய்திகள்
மரணம்

சுரண்டை: குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2021-01-15 12:32 GMT   |   Update On 2021-01-15 12:32 GMT
சுரண்டை அருகே குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை:

சுரண்டை சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் சமுத்திரம் (வயது 57). சமையல் தொழிலாளி. இவர் கடந்த 11-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இன்று ஊர் பொதுக்கிணற்றில் சமுத்திரம் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த சுரண்டை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சமுத்திரம் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News