செய்திகள்
பள்ளிகள் திறப்பையொட்டி தூய்மை செய்யும் பணி தீவிரம்

பள்ளிகள் திறப்பையொட்டி தூய்மை செய்யும் பணி தீவிரம்

Published On 2021-01-15 09:55 GMT   |   Update On 2021-01-15 09:55 GMT
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி அதியமான் கோட்டையில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நொய்யல்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்ததால், தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இதனால் கடந்த 9-மாதத்திற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் வகுப்பறைகள் அனைத்தும் குப்பை கூலங்கள் ஆகவும் இருந்ததால் பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி அதியமான் கோட்டையில் உள்ள அரசு பள்ளியை கூலித் தொழிலாளர்கள் மூலம் குப்பைகளை சுத்தம் செய்தும், குப்பை கூலங்களை அகற்றி சீரமைக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News