செய்திகள்
நெல்லை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
நெல்லை அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் நேற்று தச்சநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்திரம்புதுக்குளம் செல்லும் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த கண்ணன், இலுப்பை பாண்டியன், ஆறுமுகம், குமார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.1,460-ஐ பறிமுதல் செய்தனர்.