செய்திகள்
தற்கொலை

ஆலத்தூர் அருகே விஷம் தின்று தம்பதி தற்கொலை

Published On 2021-01-07 03:18 GMT   |   Update On 2021-01-07 03:18 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே விஷம் தின்று தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை அடுத்துள்ள தொட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 60). இவருடைய மனைவி சரோஜா(52). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவரை கண்ணன் கவனித்து வந்தார்.

இந்த தம்பதிக்கு மாணிக்கராஜ்(38), கோவிந்தராஜ்(35) என 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்களை யாரும் கவனித்து கொள்ளாததால் மனமுடைந்த கண்ணன், சரோஜா ஆகியோர் நேற்று மாலை அரளி விதையை(விஷம்) அரைத்து தின்று தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News