செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

உடையாபட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-01-05 12:02 GMT   |   Update On 2021-01-05 12:02 GMT
உடையாபட்டி, மேட்டுப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சேலம்:

சேலம் உடையாபட்டி, மேட்டுப்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உடையாபட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யாநகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகர், அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ரமம், தாதம்பட்டி, மேட்டுபட்டிதாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர், மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன்சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாளகுண்டம், எம்.பெருமாபாளையம், சின்னகவுண்டாபுரம், கருமாபுரம், பெரியகவுண்டாபுரம், வேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News