செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2020-12-31 07:20 GMT   |   Update On 2020-12-31 07:20 GMT
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

* திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

* தென் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

* வடகடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

* ஜன.1, 2ந் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

* ஜன.3, 4ந் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News