செய்திகள்
கோப்புப்படம்

கோவை மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று - முதியவர்கள் உள்பட 4 பேர் பலி

Published On 2020-12-31 02:09 GMT   |   Update On 2020-12-31 02:09 GMT
சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 91 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது
கோவை:

சுகாதாரத் துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையை சேர்ந்த 91 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 75, 70 வயது முதியவர்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 70 வயது முதியவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 46 வயது ஆண் ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதன்மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 101 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கோவையில் இதுவரையில் 50 ஆயிரத்து 774 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 821 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News