செய்திகள்
கலெக்டர் அண்ணாதுரை

மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம் - விழுப்புரம் கலெக்டர் தகவல்

Published On 2020-12-28 12:27 GMT   |   Update On 2020-12-28 12:27 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 2020-2021-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பணிச்சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச்சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தொழில் புரிபவராயின் சுய தொழில் புரிவதற்கான சான்று, மார்பளவு புகைப்படம்-2 ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எனவே தகுதியுடைய பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News