செய்திகள்
கோப்புபடம்

கடத்தூர் அருகே பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்

Published On 2020-12-26 08:35 GMT   |   Update On 2020-12-26 08:35 GMT
வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடத்தூரில் நடைபெற்றது.
கடத்தூர்:

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கடத்தூரில் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் முன்பு உழவர் பேரியக்கம் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வேலுசாமி தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர்.

இதில் மாநில இளைஞர் சங்க துணை தலைவர் செந்தில், மூத்த நிர்வாகி கனல் ராமலிங்கம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ், துணை சேர்மேன் சக்திவேல், கவுன்சிலர்கள் ஜெயகுமார், சங்கர், நகர செயலாளர் கந்தசாமி, தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்னராஜ், தென்னரசு, முத்துகுமார், கலைமணி, ராஜேந்திரன் மற்றும் பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து ெகாண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி ஊர்வலமாக பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

Similar News