செய்திகள்
விபத்து

இண்டூர் அருகே விபத்து: அரசு பஸ் மோதி 16 வயது சிறுவன் பலி

Published On 2020-12-23 06:13 GMT   |   Update On 2020-12-23 06:13 GMT
தருமபுரி மாவட்டம் இண்டூர் அரசு பஸ் மோதிய விபத்தில் 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லம்பள்ளி:

தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகன் சஞ்சய் (வயது 16).

இந்த நிலையில் நேற்று மதியம் மொபட்டில் சோமனஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லாபுரம் அருகே சென்ற போது, பென்னாகரத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் சஞ்சய் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News