செய்திகள்
வாழப்பாடி அருகே கார் மோதி கூலித்தொழிலாளி பலி
வாழப்பாடி அருகே கார் மோதி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி:
பெத்தநாயக்கன்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 59). கூலித்தொழிலாளி. இவர் தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டிக்கு பஸ்சில் சென்றார்.
மேட்டுப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய ராஜேந்திரன் சாலையை கடக்க முயன்றார். அப்போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேந்திரனின் மகன் சக்திவேல் (30) இதுகுறித்து வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.