செய்திகள்
சாலையை சரி செய்த ஊழியர்கள்

சாலை பள்ளத்தில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு

Published On 2020-12-09 05:22 GMT   |   Update On 2020-12-09 05:56 GMT
கோடம்பாக்கம் அருகே சாலையில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார்.
சென்னை:

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் நரசிம்மன் சாலையில் நடந்து சென்றார். அப்போது மழைநீர் தேங்கி இருந்ததால் சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் அவர் தவறி விழுந்தார்.



தவறி விழுத்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மயங்கி விழுந்த ஓட்டுநர் நரசிம்மன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மழைநீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Tags:    

Similar News