கடன் பிரச்சினையில் அவதிப்பட்டு வந்த ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சையில் ரெயில்வே ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
பதிவு: டிசம்பர் 05, 2020 20:21
தற்கொலை
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில்வே காலனியை சேர்ந்தவர் சேவியர்(வயது58). ரெயில்வே ஊழியராக பணி புரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சேவியருக்கு கண் பார்வை குறைபாடு இருந்தாக தெரிகிறது. மேலும் கடன் பிரச்சினையும் இருந்துள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த சேவியர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கில் தொங்கினார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் போதுமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.