செய்திகள்
மோகனூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
மோகனூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:
மோகனூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மணப்பள்ளி ஊராட்சி தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் சுகுணா. இவரது மகள் ஹரினா (வயது 18). இவர் பரமத்திவேலூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் இவர் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய்மாமன் சுகுமார் (35) என்பவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.