செய்திகள்
தர்மபுரியில் பாஸ்போர்ட் இன்றி சுற்றித்திரிந்த வெளிநாட்டு முதியவர்
தர்மபுரியில் பாஸ்போர்ட் இன்றி சுற்றித்திரிந்த வெளிநாட்டு முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி டவுன் பகுதியில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு முதியவர் சுற்றித்திரிந்தார். அவரை நேற்று தர்மபுரி டவுன் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது பெயர் டேவிட் ஆண்டனி (வயது 68) என்றும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
பெங்களூருவில் தனியார் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இத்தாலி நாட்டில் உள்ள மகனிடம் தனது பாஸ்போர்ட் மற்றும் விசா இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி டவுன் பகுதியில் கடந்த சில நாட்களாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு முதியவர் சுற்றித்திரிந்தார். அவரை நேற்று தர்மபுரி டவுன் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது பெயர் டேவிட் ஆண்டனி (வயது 68) என்றும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும் போலீசாரிடம் தெரிவித்தார்.
பெங்களூருவில் தனியார் கல்லூரியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இத்தாலி நாட்டில் உள்ள மகனிடம் தனது பாஸ்போர்ட் மற்றும் விசா இருப்பதாக அவர் கூறினார். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.