செய்திகள்
எச்சரிக்கை விடுக்காத போதிலும் சென்னையில் பலத்த மழை ஏன்?
தென் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்யும் என்ற கணிப்பை மாற்றும் அளவுக்கு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது வானிலை மைய அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை:
ஆனால் அவர்களது கணிப்பை மாற்றும் அளவுக்கு சென்னையில் பலத்த மழை பெய்துள்ளது. இது வானிலை மைய அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் புவியரசனிடம் கேட்டபோது, “வட மாவட்டங்களில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்று கணித்து இருந்தோம். ஆனால் சென்னையில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது. இதற்கும் புரெவி புயலின் தாக்கமே காரணமாகும். இன்று முழுவதும் மழை நீடிக்கும்” என்று தெரிவித்தார்.