செய்திகள்
கைது

வாணியம்பாடியில் மணல் கடத்திய 5 பேர் கைது

Published On 2020-12-02 09:23 GMT   |   Update On 2020-12-02 09:23 GMT
வாணியம்பாடியில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாணியம்பாடி:

வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் பாலாற்றில் மணல் கடத்துவதாக வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்றுமுன்தினம் இரவு வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மணல் கடத்திவந்த 4 மாட்டு வண்டிகளை மடக்கி பிடித்தனர். உடனே மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சுகன்யா கொடுத்த புகாரின்பேரில் வாணியம்பாடி தாலூகா போலீசார் நேற்று அதே பகுதியை சேர்ந்த அன்பரசன், ஆதவன், சின்னராஜ், கண்ணன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதே போல் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியில் துணைபோலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணல் கடத்தி வந்த சரவணன் என்பவரை கைது, செய்து மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News