செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

நாகர்கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-30 08:52 GMT   |   Update On 2020-11-30 08:52 GMT
குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் பேரணி சென்ற விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்து பேசினார்.

மாவட்ட செயலாளர் தங்கமோகன், மாநகர செயலாளர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஜிஸ், ராஜநாயகம், மனோகர ஜஸ்டஸ், லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி அகமது உசேன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News