செய்திகள்
விபத்து பலி

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2020-11-28 10:10 GMT   |   Update On 2020-11-28 10:10 GMT
திருச்சி அருகே இருசக்கர வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி அரியமங்கலம் உக்கடை ஜோதி நகர் ரைஸ்மில் சந்து தெருவை சேர்ந்தவர் பழனி(வயது 69). இவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜெகநாதபுரம் அருகே சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News