செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரி, எடப்பாடி பழனிசாமி

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா?: முதலமைச்சர் பதில்

Published On 2020-11-24 11:27 GMT   |   Update On 2020-11-24 11:27 GMT
மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீதி திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது.
நிவர் புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாளை மற்றும் நாளைமறுநாளும் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று பெய்து வரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.

சென்னை எழிலகத்தில் புயல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவரிடம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுமா? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ‘‘ஏரிகளின் கரைகளை பலப்படுத்தவும், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை பெய்வதை பொறுத்துதான் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்’’ என்றார்.
Tags:    

Similar News