செய்திகள்
சென்னை புறநகர் ரெயில்

நிவர் புயல் எதிரொலி: நாளை காலை 10 மணியில் இருந்து சென்னை புறநகர் ரெயில் சேவை ரத்து

Published On 2020-11-24 11:06 GMT   |   Update On 2020-11-24 11:06 GMT
நிவர் புயல் காரணமாக நாளை காலை 10 மணியில் இருந்து சென்னை புறநகர் ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளை அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கிறது. இதனால் நாளையும் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிவர் புயல் காரணமாக சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படும். காலை 10 மணி வரை சூழலுக்கு ஏற்ப ரெயில் சேவை இருக்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Tags:    

Similar News