செய்திகள்
பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
பேட்டை அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேட்டை;
சுத்தமல்லியை அடுத்த சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 45). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் சங்கன்திரடு மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர் தங்கப்பாண்டி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கப்பாண்டி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.