செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 181 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 100-க்கும் குறைவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 333 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.
தற்போது 765 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 4 நாட்களாக கொரோனாவால் யாரும் இறக்கவில்லை. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஆக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 100-க்கும் குறைவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 298 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 181 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 333 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள்.
தற்போது 765 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 4 நாட்களாக கொரோனாவால் யாரும் இறக்கவில்லை. இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஆக உள்ளது.