செய்திகள்
கோப்புபடம்

திண்டிவனம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

Published On 2020-11-13 09:23 GMT   |   Update On 2020-11-13 09:23 GMT
திண்டிவனம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

திண்டிவனம் ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்டனர். அப்போது சலவாதியில் கஞ்சா விற்றதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள், சலவாதியை சேர்ந்த திகில் என்கிற ஜெகதீசன்(வயது 38), பஞ்சநாதன் மகன் சுபன்(21), ஜக்காம்பேட்டையை சேர்ந்த லட்சுமிபதி(20) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News