செய்திகள்
குளித்தலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
குளித்தலை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:
குளித்தலையில் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு, கஞ்சா விற்பனை செய்த குளித்தலை காசுக்காரசெட்டியார் தெருவை சேர்ந்த வினோத் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.