செய்திகள்
கோப்புபடம்

குளித்தலை அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

Published On 2020-11-10 10:57 GMT   |   Update On 2020-11-10 10:57 GMT
குளித்தலை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.
குளித்தலை:

குளித்தலையில் மாரியம்மன் கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் குளித்தலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு, கஞ்சா விற்பனை செய்த குளித்தலை காசுக்காரசெட்டியார் தெருவை சேர்ந்த வினோத் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News