செய்திகள்
கோப்புபடம்

நாமக்கலில் முககவசம் அணியாத 253 பேர் மீது வழக்கு

Published On 2020-11-10 09:08 GMT   |   Update On 2020-11-10 09:08 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசம் அணியாத 253 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசம் அணியாத நபர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 253 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அவர்களிடமிருந்து ரூ.50 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் எச்சில் துப்பிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
Tags:    

Similar News