செய்திகள்
கோப்புபடம்

கரூர் அருகே கார் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

Published On 2020-11-09 10:09 GMT   |   Update On 2020-11-09 10:09 GMT
கரூர் அருகே சாலையை கடந்த போது முன்னாள் ராணுவ வீரர் கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
கரூர்:

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோசப் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். இவர் நேற்று அதிகாலை தனது ஊரில் இருந்து பெங்களூரு செல்வதற்காக தனது காரில் புறப்பட்டு வந்தார்.

கரூர் சுக்காலியூர் செக்போஸ்ட் அருகே வந்தபோது சாப்பிடுவதற்காக சாலையோரம் காரை நிறுத்தினார். பின்னர் சாலையின் மறுபக்கம் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று ஜோசப் சாப்பிட்டார். பின்னர் சாப்பிட்டு முடித்து விட்டு காரை எடுப்பதற்காக சாலையை கடக்க முயன்றார்.

அப்போது மதுரையில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக ஜோசப் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜோசப் படுகாயமடைந்து உயிருக்கு போராடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் ஜோசப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News