செய்திகள்
கோப்புபடம்

கோட்டூர் அருகே லாரி மோதி மூதாட்டி பலி

Published On 2020-11-05 09:59 GMT   |   Update On 2020-11-05 10:01 GMT
கோட்டூர் அருகே லாரி மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோட்டூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கீழச்சேரி கிராமத்தை சேர்ந்த மைக்கேல் சாமி மனைவி சலேத்துமேரி (வயது65). இவர் நேற்று காலை பால் வாங்கி கொண்டு சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த லாரி சலேத்துமேரி மீது மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த சலேத்துமேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த திருப்பதி (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News