செய்திகள்
சீமான்

மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்- சீமான் கோரிக்கை

Published On 2020-11-04 08:33 GMT   |   Update On 2020-11-04 08:33 GMT
தமிழகம் முழுவதும் மின் வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசின் மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, காலி பணியிடங்களை நிரப்புதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நாட்களாகப் போராடிவரும் நிலையில் அரசு அவர்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாது அலட்சியம் செய்துவருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழகம் முழுவதும் மின் வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணிபுரிந்து வரும் ஏறக்குறைய 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்தபடி ஒருநாள் ஊதியமாக ரூ.350--ம், விழாக்கால ஊக்கத்தொகையையும் முறையாக வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News