செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தர்மபுரி அருகே திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி:
கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 23). தனியார் நிறுவன ஊழியர். அரூர் அருகே உள்ள பையர்நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துமோனிகா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுடைய காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் 2 பேரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
தங்களுக்கு மிரட்டல் வருவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.