செய்திகள்
மின்சார நிறுத்தம்

பாலம்பாள்புரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2020-10-30 12:18 GMT   |   Update On 2020-10-30 12:18 GMT
பாலம்பாள்புரம் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
கரூர்:

கரூர் பாலம்பாள்புரம் துணைமின் நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், இடையூறாக உள்ள மின்கம்பங்களை மாற்றியமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பாலம்பாள்புரம் மற்றும் ஐந்துரோடு ஒரு பகுதி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News