செய்திகள்
கோப்புபடம்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை

Published On 2020-10-26 13:23 GMT   |   Update On 2020-10-26 13:23 GMT
திருவாரூர் அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக சுந்தரலிங்கம் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் திருவாதிரைமங்கலம் ஊராட்சி தலைவர் பழனியம்மாளின் கணவர் செந்தில் மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது, சுந்தரலிங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்தனர். 

இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபபதிவு செய்து வட்டார வளர்ச்சி அலுவலா சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News