செய்திகள்
சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
சிவகாசி அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா மற்றும் ரூ.350 -ஐ பறிமுதல் செய்தனர்.
சிவகாசி:
திருத்தங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் அதிரடி சோதனை நடத்தினார்.
இதில் கஞ்சா வைத்திருந்ததாக அதிவீரன்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (வயது 22) என்பவரையும், திருத்தங்கலை சேர்ந்த பிரதீப்குமார் (19) என்பவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா மற்றும் ரூ.350 -ஐ பறிமுதல் செய்தனர்.