செய்திகள்
கோப்புபடம்

கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

Published On 2020-10-23 09:25 GMT   |   Update On 2020-10-23 09:25 GMT
கொல்லிமலையில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேந்தமங்கலம்:

கொல்லிமலையில் உள்ள வளப்பூர் நாடு ஊராட்சி கடம்பலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி பாலாமணி. இவர்களுடைய மகன் பாலமுருகன் (வயது 20).

இவர் கடந்த 20-ந் தேதி வேலைக்கு சென்று விட்டு அரசம்பட்டியில் இருந்து ஓடக்காடு செல்லும் சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவம் குறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த பாலமுருகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News