செய்திகள்
விபத்து

ராசிபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2020-10-20 14:05 GMT   |   Update On 2020-10-20 14:05 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராசிபுரம்:

ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அருகேயுள்ள தாண்டாகவுண்டம்பாளையம் உரம்பு வண்ணான் காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது75). விவசாயி. மனைவியை இழந்த துரைசாமி அதே பகுதியில் உள்ள அவரது மகன் பாலுசாமி வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு துரைசாமி உரம்பு பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (17) என்பவர் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஜெகதீஷ் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் விவசாயி துரைசாமி மீது பயங்கரமாக மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த அவரது மகன் பாலுசாமி, தந்தையை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு முதியவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து மங்களபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார்சைக்கிளில் வந்த ஜெகதீசும் காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News