செய்திகள்
கைது

மாரண்டஅள்ளி அருகே மது விற்றவர் கைது

Published On 2020-10-09 07:16 GMT   |   Update On 2020-10-09 07:16 GMT
மாரண்டஅள்ளி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பெல்ரம்பட்டி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது அதே ஊரை சேர்ந்த மணி (வயது 42), சித்துராஜ் (40) ஆகியோர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 73 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News